நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு; சிசோடியாவுக்கு இன்று ஜாமீன் கிடைக்குமா?
கைது செய்யப்பட்ட மணிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தில்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மதுபான கொள்கை ஊழல் வழக்கில், கடந்த 26 ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. இவ்வழக்கில் திஹார் சிறையில் இருந்த மணிஷ் சிசோடியாவை பணபரிமாற்ற மோசடி வழக்கில் அமலாக்கத்துறையும் கைது செய்தது.அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மணிஷ் சிசோடியாவின் காவல், 22 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் தில்லியில் உள்ள ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில், மணிஷ் சிசோடியாவை அமலாக்கத்துறையினர் காணொலி வாயிலாக ஆஜர்படுத்தினர்.
இதில், சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
Leave A Comment