• Login / Register
  • செய்திகள்

    இலங்கையின் புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன்!

    இலங்கையின் 36 ஆவது பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை நியமிக்க ஜனாதிபதி சிபாரிசு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதன்படி, தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன ஓய்வு பெற்றதன் பின்னர், தேஷபந்து தென்னகோன் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட உள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

    தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன எதிர்வரும் 25 ஆம் திகதி ஓய்வுபெறவுள்ளார்.

    Leave A Comment