• Login / Register
  • செய்திகள்

    ஆப்கானிஸ்தானில் 17 தொழிலாளர்களின் உயிரை காவுவாங்கிய பஸ் விபத்து!

    ஆப்கானிஸ்தானில்  இடம்பெற்ற பஸ் விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஆப்கானிஸ்தானில்  தாகார் மாகாணத்தில் உள்ள சக் அப் என்ற இடத்தில்  நிலக்கரி சுரங்க தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற  பஸ்  வளைவில் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது. 

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.7 பேர் படுகாயம் அடைந்தனர். 

    இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

    Leave A Comment