நாலாவது நாளாகவும் முடங்கியது நாடாளுமன்றம்!
நாடாளுமன்றில் நான்காவது நாளாக இரு அவைகளும் நாளை காலைவரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றம் இன்று காலை கூடியவுடன் இரு அவைகளிலும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரி, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் பதாகைகளுடன் அவையின் மையப்பகுதியில் முற்றுகையிட்டு, முழக்கம் எழுப்பினா்.
அதே நேரத்தில், ‘இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது’ என்று பிரிட்டனில் தெரிவித்த கருத்துக்காக, தேசத்திடம் ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி, ஆளும் தரப்பு உறுப்பினா்கள் எதிா்கோஷம் எழுப்பினா்.
இதனால், அவை நடவடிக்கைகள் காலை முழுவதும் ஒத்திவைப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடியது.
ஆனால், அவைகள் கூடியவுடன் இரு அவைகளிலும் மீண்டும் அமளி தொடர்ந்ததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
Leave A Comment