• Login / Register
  • செய்திகள்

    சட்டப்பேரவை தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்பதல் அளிக்க வேண்டும் - அண்ணாமலை!

    ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தொடர்பான தமிழக சட்டப்பேரவை தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துதான் ஆக வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்யும் தமிழக அரசின் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்த நிலையில் அதனை ஆளுநர் ஆர்.என். ரவி மீண்டும் திருப்பி அனுப்பியுள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை சிட்ரா கலையரங்கில் நேற்று (08) புதன்கிழமை நடைபெற்ற மகளிர் தின விழாவில் பங்கேற்ற பிறகு பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்திருந்தார்.

    இது தொடர்பில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் அதை தடை செய்ய வேண்டும் என்ற கருத்தில் பாஜக உறுதியாக இருக்கிறது. ஆளுநர் சில கேள்விகள், சந்தேகங்களை எழுப்பியுள்ளார். அதை மக்களிடம் மாநில அரசு சொல்ல வேண்டும்.

    சட்டப்பேரவையில் இதை மீண்டும் தீர்மானமாக்கி கொடுத்தால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துதான் ஆக வேண்டும்.

    ஆளுநர் ஒப்புதல் அளித்து இந்த சட்டம் அமலுக்கு வந்தால், அதற்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவு வரவும் வாய்ப்பு உள்ளது. இந்த மசோதாவை மறுபடியும் ஆராய்ந்து அதில் இருக்கும் பிரச்னைகளை விவாதிக்க வேண்டும் என்றார்.

    Leave A Comment