#N2E மக்கள் எழுச்சிப் பேரணி; முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தி தொடர்கிறது!
வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி மேற்கொள்ளப்பட்டு வரும் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி சற்று முன்னதாக முள்ளிவாய்க்காலை சென்றடைந்துள்ளது.
முல்லைத்தீவை நோக்கிய 2வது நாள் பேரணி, இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக வருடா வருடம் மே-18 அன்று பொது நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சற்று முன்னர் சென்றடைந்துள்ளது.
பேரணியாக சென்றவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மக்கள் எழுச்சிப் பேரணி முல்லைத்தீவை நோக்கி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இன்று மாலை முல்லைத்தீவை சென்றடையும் பேரணி அங்கு 2வது நாள் பயணத்தை நிறைவு செய்கிறது.
நாளை (06) காலை முல்லைத்தீவில் இருந்து திருகோணலை நோக்கி பேரணி புறப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave A Comment