• Login / Register
  • செய்திகள்

    பழனி முருகன் கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு!?

    எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள பழனி முருகன் கோவில்  குடமுழுக்கு தமிழில் இடம்பெறவுள்ளதாகா தகவல்கள் வெளியாகியுள்ளன 

    கரூரைச் சேர்ந்த தமிழ் ராஜேந்திரன், என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு மீதான வாதத்தின்போது அரசு வழக்கறிஞர் இதனை தெரிவித்துள்ளார்.

     தமிழ் ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில்  பழனி முருகன் கோயில் குடமுழுக்கு தமிழில் இடம்பெறவேண்டும்  முருகன் தமிழ் கடவுள். இதனால் குடமுழுக்கின்போது தமிழில் மந்திரம் ஓதப்பட வேண்டும். என்றும்,  தமிழகத்தில் கோயில் குடமுழுக்கில் தமிழில் மந்திரம் ஓத வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை 2020-ல் உத்தரவிட்டுள்ளது.என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு முன்புவிசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, தமிழ் கடவுள் முருகன். இதனால் தமிழில் குடமுழுக்கு நடத்துமாறு கேட்க வேண்டியதில்லை. பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கின்போது தமிழில் மந்திரம் ஓத அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது  என்று தெரிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து நீதிபதி  பழனி முருகன் கோயில் குடமுழுக்கில் தமிழில் மந்திரம் ஓதப்படுவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

    Leave A Comment