• Login / Register
  • செய்திகள்

    ஆளுநர் மாளிகை முற்றுகை; திருமாவளவன் கைது!

    சட்டப்பேரவை உரை விவகாரம் மற்றும் மரபுகளை மதிக்காது ஆளுநர் வெளிநடப்பு செய்தமையை கண்டித்தும் ஆளுநரை திரும்பப்பெற மத்திய அரசை வலியுறுத்தியும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயற்சித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் .திருமாவளவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    தமிழ்நாடு ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப்பெற வலியறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஜனவரி 13 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஏற்கெனவே அறிவித்திருந்தார். 

    அதன்படி சென்னை கிண்டியில் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், காங்கிரஸ் சார்பில் போபண்ணா ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர். 

    இந்நிலையில், 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தொல். திருமாவளவன்  தலைமையிலான விசிகவினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் நோக்கில் பேரணியாகச் சென்றனர். 

    பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் தொல். திருமாவளவன் மற்றும் விசிகவினரை கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் வைத்துள்ளனர்.

    Leave A Comment