• Login / Register
  • செய்திகள்

    தமிழகம் வர முயன்ற 14 ஈழத் தமிழர்கள் இலங்கையில் கைது

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருள்களின் விலை அங்கே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதனால், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகவேண்டுமென மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டங்களுக்கு, இலங்கை அரசு ஊழியர்கள் ஆதரவு தெரிவித்து நேற்று முதல் நாடாளுமன்றத்தை முற்றையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், இலங்கையில் இருந்து இந்தியாவின் தமிழகம் நோக்கிதமிழ் மக்கள் அகதிகளாக மக்கள் வரத் தொடங்கியுள்ளனர்.

    நேற்று இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கையில் இருந்து தமிழகத்துக்குத் தப்பி வரமுயன்ற 14 பேரை  கைது செய்தனர்.

    மன்னார் கடற்படையில் 12 பேரும், 7ஆம் தீடை பகுதியில் 2 பேருமாக மொத்தம் 14 பேர் கைது  செய்யப்பட்டனர். 

    கடந்த மே 4ஆம் தேதி, இலங்கையில் இருந்து தமிழகம் தப்பி வரமுயன்ற 14 பேரை பேரை பேசாலை கடற்பகுதியில், இலங்கை கடற்படையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.


    Leave A Comment