8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!
இலங்கையின் பல பிரதேசங்களில் நீடித்து வரும் சீரற்ற காலநிலை காரணமாக கன மழை பெய்து வரும் நிலையில் எட்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நேற்று பிற்பகல் குறித்த மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை இன்று மாலை 5 மணிவரை செல்லுபடியாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
Leave A Comment