• Login / Register
  • செய்திகள்

    போரிஸ் ஜான்சன் வருகை: குஜராத் குடிசைப் பகுதிகள் மூடல்

    இங்கிலாந்து அதிபர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள்கள் சுற்றுப் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். முதல்கட்டமாக குஜராத் வந்த அவருக்கு குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் சிறப்பான வரவேற்பை அளித்தார்.

    பின்னர் அங்கிருந்து போரிஸ் ஜான்சன் அகமதாபாத் நகரில் உள்ள சபர்மதி ஆசிரமம் சென்று பார்வையிட்டார். 

    இந்த நிலையில், போரிஸ் ஜான்சனின் குஜராத் வருகையொட்டி அகமதாபாத் நகரில் சபர்மதி ஆசிரம் அருகில் உள்ள குடிசைப் பகுதிகளை வெளியே தெரியாதவாறு, வெள்ளை துணிகளை வைத்து பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அடைத்து வைத்துள்ளனர்.

    இந்த புகைப்படங்கள் மற்றும் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன.

    கடந்த 2020ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், குஜராத்திற்கு வருகை தந்த போது, அங்குள்ள குடிசைப் பகுதிகளை மறைக்க நீண்ட சுவர்கள் எழுப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


    Leave A Comment