• Login / Register
  • செய்திகள்

    டெல்லி அனுமன் ஜெயந்தி கலவரம் : விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்

    தலைநகர் டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரியில் நேற்று நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இருப்பிரிவினரிடையே கலவரம் ஏற்பட்டது. காவல்துறையினர் இந்த கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர  முயற்சி செய்த போது கலவரத்தில் ஈடுபட்டவர்கள், காவலர்களையும் கற்களை கொண்டு தாக்குதல் நடத்தினார்கள்.

    இந்த கல்வீச்சு தாக்குதலில் காவல்துறையினர் உட்பட பலர் காயமடைந்தனர்.

    இந்த வன்முறை குறித்து தகவலறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் உயர் காவல்துறை அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொண்டு வன்முறையைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளார்.

    அதைத் தொடர்ந்து, இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக 10 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த கலவரம் மற்றும் மோதல் தொடர்பாக இதுவரை 2 சிறுவர்கள் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு, தலைநகரில் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே, டெல்லியில் அனுமன் ஜெயந்தியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

    இதே போன்று கடந்த 11ஆம் தேதி, ராமநவமி ஊர்வலத்தின் போது கர்நாடகம், மத்திய பிரதேசம் மேற்கு வங்காளம் உள்ளிட்ட இடங்களில் வன்முறை மற்றும் கலவரங்கள் நடந்த நிலையில் தற்போது டெல்லியில் ஹனுமன் ஜெயந்தி கலவரம் ஏற்பட்டுள்ளது.


    Leave A Comment