ஆசிரியர் தகுதித் தேர்வு – ஏப்ரல் 26 வரை காலஅவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 26 ஆம் தேதி வரை காலஅவகாசம் நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள
அறிவிப்பில்,
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2022 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு
(TET) தாள் 1 மற்றும் தாள் II எழுதுவதற்கான அறிவிக்கை 07.03.2022 அன்று வெளியிடப்பட்டு,
விண்ணப்பங்கள் 14.03.2022 முதல் 13.04.2022 வரை பெறப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்விற்கான காலத்தை நீட்டிக்க
வேண்டுமென ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு விண்ணப்பங்கள் வந்தன.
இதனை தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பங்கள் பெறுவதற்கான காலக்கெடு 26.04.2022 வரை நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அதன் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
Leave A Comment