• Login / Register
  • செய்திகள்

    'பிரதமர் மோடி நாட்டை விற்கிறார்' – பிரகாஷ்ராஜ் சர்ச்சை பதிவு

    நடிகர் பிரகாஷ் ராஜ், நடிப்பையும் தாண்டி சமூக நலப்பணிகள், அரசியல் என பல்வேறு தளங்களிலும் பயணித்து வருகிறார்.

    நடிகர் பிரகாஷ் ராஜ் சில நேரங்களில் பாரதிய ஜனதா கட்சி, பிரதமர் நரேந்திர மோடி குறித்து கருத்துக்களை தெரவித்து சர்ச்சையில் சிக்கி வருவது வழக்கம்.

    இந்த நிலையில், பிரகாஷ் ராஜ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பதிவில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து கருத்து கூறியுள்ளார்.

    அதில், பிரதமர் மோடி டீ விற்றதை நம்பியவர்கள், நாட்டை விற்றுக் கொண்டிருக்கிறார் என சொல்லும் போது நம்ப மறுக்கிறார்கள் என அதில் தெரிவித்துள்ளார்.


    மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்று வருகின்ற நிலையில், நடிகர் பிரகாஷ் கூறிய கருத்துகள் இணைய தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமின்றி அனைத்து மட்டங்களிலும் பேசும் பொருளாகியுள்ளது.

    Leave A Comment