'ஆட்சி மாற்றம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு' – ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரியில் இன்று நடைபெற்ற தென்னிந்திய வணிக மற்றும்
தொழில் அவைக் கூட்டத்தில், புதுச்சேரியின் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘மத்திய அமைச்சர் அமித்ஷா
புதுச்சேரிக்கு வருகை தருவது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், புதிய மைல்கல்லாகவும்
இருக்கும்’ எனக் கூறினார்.
‘அமித்ஷாவின் வருகையை புதுச்சேரியின் வளர்ச்சிக்கான பாதையாக
பார்க்கவேண்டும். அவரது வருகையை எதிர்ப்பது மாநில வளர்ச்சியை எதிர்ப்பது போலாகும்’ என்றும் தமிழிசை தெரிவித்தார்.
புதுச்சேரியில் ஆளுநர் மூலம் மாற்றம் குறித்த நிருபரின் கேள்விக்கு பதிலளித்த ஆளுநர் தமிழிசை, ‘எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது.பொதுமக்களின் நலனுக்காக எந்த கோப்புகள் வந்தாலும் நான் ஒப்புதல் அளிக்கிறேன். மேலும் ஆளுநர் மாளிகையில் என்ன நடக்கிறது என யார் வந்தாலும் பார்க்கலாம்’ எனவும் தெரிவித்தார்.
Leave A Comment