பசியை சமாளிப்பது எப்படி?
உடல் எடை அதிகமானவர்களுக்கான மிகப்பெரிய சவால்களில் ஒன்று பசியை சமாளிப்பது.
பசியை கட்டுப்படுத்துவதற்கான சில வழிமுறைகள்?
பசியை கட்டுக்குள் வைத்திருப்பது எவ்வளவு முக்கியமோ, அந்தளவுக்கு உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை அவ்வப்போது அருந்துவதும் மிகவும் முக்கியம். தண்னீர் தாகம் அதிகமானாலும் பசி எடுத்தாலும், பலருக்கும் அவை இரண்டுக்கும் வித்தியாசம் தெரியவதில்லை. இந்த இரண்டுக்குமான தேவை அதிகமாக இருக்கும் போது நமக்கு கிரக்கம் மற்றும் சோர்வுநிலை ஏற்படும். அதை போக்க அவ்வப்போது தண்ணீர் குடித்து வரவேண்டும்.
வேகமாக மாறிவரும் காலநிலையில் நம்மில் பலரும் சரியான நேரத்தில் சாப்பிடுவதில்லை. இதனால் உடலில் தேவையற்ற சிக்கல்கள் அதிகரித்து உடல் பெருக்கம் ஏற்பட்டு நம்மை சிக்கலுக்குள் தள்ளி விடுகிறது. எப்பொழுதும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும் தவறு அளவுக்கு குறைவாக சாப்பிடுவதும் தவறு. தினமும் ஒரே நேரத்தில் உணவு உண்பது சிறந்தது காலை உணவு என்றால் காலை 8 மணியிலிருந்து 10 மணி வரைக்குள்ளும் மதிய உணவு என்றால் மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள்ளும் இரவு உணவிற்கு 8 மணியிலிருந்து 9 மணிக்குள்ளும் சாப்பிடுவது நல்லது.
பயங்கர பசி இருக்கும்போது குறைந்தது 10-20 நிமிடங்கள் காத்திருங்கள். பசி அதிகம் இருக்கும்போது நீங்கள் சாப்பிட்டால் உங்களால் குறைவாகவே சாப்பிடமுடியும். இதனால் உங்கள் உடல் எடை அதிகரிக்காது.
சாப்பிடும் போது உணவை நன்றாக சிறிது சிறிதாக கடித்து மென்று சாப்பிடுங்கள். நீங்கள் உண்ணும் அறையிலோ அல்லது சூழலிலோ கட்டுப்பாடுகளை விதிக்கவும். இது உண்ணும் செயல்முறையிலிருந்து உங்களை திசைதிருப்பக்கூடாது. போன்கள், டிவிகள் மற்றும் கேஜெட்களை உணவின் போது ஒதுக்கி வைக்கவும். கடைசியாக உணவை கடித்து மென்று விழுங்கிய பிறகே மற்றொரு கடி உணவை வாயில் வையுங்கள். மெதுவாக சாப்பிடும்போது உங்களால் குறைவாக சாப்பிடமுடியும்.
உணவு உண்ணுவதற்கு முன் அதிக தண்ணீரை குடியுங்கள். அப்படி செய்தால் உங்களால் அதிகம் சாப்பிட முடியாது. நீர் உங்கள் வயிற்றை முழுமையாக வைத்திருக்கும். முடிந்த அளவு நீராகாரங்களை உண்ணுங்கள். நீராகாரங்கள் விரைவில் ஜீரணமாகும் உடல் எடையை கூட்டாது.
காலை உணவு என்பது நமது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று. ஏனெனில் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், ஆற்றல் எல்லாம் காலை உணவில் இருந்து கிடைக்கப்பெறுகிறது. எனவே எழுந்த 3 மணி நேரத்தில் காலை உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி கொள்ளும்.
இப்பொழுது எல்லாம் கார்பனேட்டேடு பானங்களை குடிப்பது பேஷனாகி வருகிறது. இவற்றில் சேர்க்கப்படும் அதிகப்படியான சர்க்கரை உங்க கொழுப்பை அதிகரிக்க மட்டுமே உதவுகிறது. இதற்கு பதிலாக க்ரீன் டீ, ஜூஸ்கள் போன்ற இயற்கை பானங்களை குடியுங்கள்.
சரியாக உறங்கவில்லை, போதியநேரம் உறக்கம் நீடிக்கவில்லை, அடிக்கடி உறக்கத்தின் போது விழிப்பு ஏற்பட்டு தடைபடுவது உள்ளிட்ட தூக்கமின்மை சார்ந்த பிரச்னைகளை கொண்டவர்களுக்கு பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் பாதிக்கப்படுகின்ற. இதன்விளைவாக அவர்களுக்கு பசி உருவாகும். எவ்வளவு சாப்பிட்டாலும் வயிறு முழுமை பெறாது போன்ற உணர்வும் தூக்கமின்மை காரணமாக ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அடிக்கடி பசிக்குது பசிக்குது என்று நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதும் உங்க தொப்பை அதிகரிக்க ஒரு காரணமாகிறது. எனவே நொறுக்கு தீனிகள் சாப்பிடுவதை குறையுங்கள். உங்களை கட்டுப்பாட்டில் வைக்க முற்படுங்கள். வாரத்திற்கு ஒரு முறை மட்டும் க்ரீமி பாஸ்தா, சாக்லேட் போன்ற உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இது உங்க உடல் மெட்டா பாலிசத்தை அதிகரிக்கும். நொறுக்கு தீனிகளை ஒருமுறை சாப்பிட்டால் அது உங்களை மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும். எனவே நொறுக்கு தீனிகளுக்கு முழுக்கு போடுங்கள்.
Leave A Comment