• Login / Register
  • மேலும்

    பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு சில பயனுள்ள டிப்ஸ்!

    பரீட்சசைகள் ஆரம்பமாகிறது என்றாலே இனம்தெரியாத ஒரு பதற்றம் மாணவர்களை பிடித்துக்கொள்ளும் ப்ளஸ் 2 பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பயன்படும் சில குறிப்புக்கள் பற்றி பார்க்கலாம்.

    முக்கியமாக தேர்வு கால அட்டவணையை பார்வையில் படும்படி வைத்துக் கொள்ளவும்.

     தேர்விற்கான நுழைவுச் சீட்டினையும்  தேவையான எழுதுப் பொருட்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும். 

    தேர்வு நாட்களில் காலை சிற்றுண்டியை (அவித்த உணவு, இட்லி சிறந்தது) கண்டிப்பாக சாப்பிட்டு செல்ல வேண்டும்.

     எண்ணெய் பதார்த்தங்களைத் தவிர்த்தல் வேண்டும்.  

    தேர்வு நாட்களில் விரைவாக தூங்கச் சென்று, அதிகாலையில் எழுந்து பாடங்களைப் படிப்பது நல்லது. 

    இரவில் அதிக நேரம் கண் விழித்து படிப்பதை தவிர்க்க வேண்டும். 

    இல்லையெனில் தேர்வு எழுதும் சமயத்தில் அசதி, மறதி, வாந்தி, குழப்பம் மற்றும் சோர்வு ஏற்படும்.  

    தேர்வு அறையில் வினாத்தாளில் தேர்வு எண்ணைத் தவிர, வேறு எதுவும் எழுதுதல் மற்றும் டிக் அடித்தல் கூடாது.  

    தேர்வு நேரத்தில் வினாத்தாள் பெற்றவுடன் வினாத்தாளில் உள்ள வினாக்களை வரி வரியாக முழுவதுமாக படித்து புரிந்துகொண்டு, எவ்வித பதற்றமும் இன்றி தேர்வினை தன்னம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக எழுதத் தொடங்க வேண்டும். 

    தேர்வுக்கு நேர மேலாண்மை மிகவும் முக்கியமானதாகும். வினாவிற்கு உண்டான மதிப்பெண்ணிற்கு ஏற்றவாறு விடைகளை சுருக்கியும் விரித்தும், முக்கிய தலைப்புகள் இட்டும், தெளிவான கையெழுத்தில் எழுதுதல் மிக அவசியம்.  

    கட்டாய வினாக்களுக்கு விடை அளிக்க தவற வேண்டாம்.  இன்றைய கல்விச் சூழலில் பாடத்திட்ட நடைமுறையில் 'சிந்தனையைத் தூண்டும் வினாக்கள்' கேட்க வாய்ப்பு அதிகம் உள்ளது. 

    அறிவியல் பாடங்களில் வரும் வரை படங்களை வரைந்து பார்த்து பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.  

    எதிர்கால வாழ்வினை கருத்தில் கொண்டு, தேர்வு அறையில் எவ்வித ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுதல் கூடாது. 

     வினாக்களை தேர்வு செய்து எழுதுவதற்கு (ஊhழiஉந) வாய்ப்பு இருக்கும் பொழுது, முழுமையாக நன்கு பதில் தெரிந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பது சிறந்தது. 

    Leave A Comment