• Login / Register
  • மேலும்

    பூமியில் விழப்போகும் செயற்கைக்கோள்; அபாயம் குறித்து நாசா அறிவிப்பு!

    நாசாவின் மிக பழமையான செயற்கைக்கோள் ஒன்று பூமியில் விழலாம் எனவும், அவ்வாறு பூமியில் விழும்போது யாருக்கேனும் காயமேற்படும் அபாயம் இருப்பதாக நாசா அறிவித்துள்ளது.

    நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் அனுப்பப்பட்ட மிகப் பழமையான 38 வயதான செயற்கைக்கோள் இந்த வாரத்தில் விண்ணிலிருந்து மண்ணை நோக்கி விழலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    நாசாவின் 2,450 கிலோ எடைகொண்ட பணியிலிருந்து ஓய்வுபெறும் செயற்கைக்கோள், எங்கு வேண்டுமானாலும் விழலாம் என்று தெரிவித்துள்ளது.

    அதாவது, புவிவட்டப் பாதைக்குள் செயற்கைக் கோள் வரும்போதே, அது எரிந்துவிடும். ஆனால், ஒரு சில பாகங்கள் மட்டும் எரியாமல் பூமிக்குள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று நாசா கூறுகிறது.

    ஆனால், 9,400ல் ஒரு பங்குதான், இந்த செயற்கைக்கோள் பாகங்கள் விழுந்து யாருக்கேனும் காயம் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாகவும் தெளிவுபடுத்தியிருக்கிறது.

    ஞாயிற்றுக்கிழமை இரவில், இந்த செயற்கைக் கோள் பூமியில் விழலாம் என்றும், முழுதாக 17 மணி நேரம் அது பயணித்து பூமியை அடையலாம் என்றும் கூறப்படுகிறது.

    இதன் பாகங்கள் ஆப்ரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் மேற்கத்திய அமெரிக்காவில் விழலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    1984ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்த செயற்கைக்கோளின் ஆயுள் காலம் என்று 2 ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டது. ஓசோன் மற்றும் இதர சூழ்நிலைகளை கண்காணிக்கும் பணியை இது 2005 வரை மேற்கொண்டிருந்தது. சூரியனிடமிருந்து வரும் சக்தியை பூமி எப்படி கிரகித்துக் கொள்கிறது என்ற ஆராய்ச்சியிலும் உதவி செய்தது.

    இதற்கு சிறப்பான பிரிவு உபசரிப்பு நடைபெற்றது. அமெரிக்காவின் முதல் விண்வெளிப் பெண் சேல்லி ரைட், அமெரிக்காவின் ஆர்பிட்டிலிருந்து செயற்கைக்கோளை ரிமோட் மூலம் விடுவித்தார்.

    Leave A Comment