• Login / Register
  • வேலைவாய்ப்பு

    மத்திய அரசில் 3712 காலியிடங்கள்; பிளஸ் 2 தேர்ச்சியுடன் ரூ. 92 ஆயிரம் வரை சம்பளம்!

    மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3,712 பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் ரூ. 92 ஆயிரம் வரை சம்பளம் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை எழுத்தர், இளநிலை செயலக உதவியாளர், தரவு உள்ளிடும் பணியாளர்(டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்), தரவு உள்ளிடும் பணியாளர் கிரேடு 'ஏ' நிலை என 3,712 பதவிகளுக்கான ஒருங்கிணைந்த மேல்நிலைத் (10+2) தேர்வு, 2024-க்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது.

    இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து 7 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மொத்த காலியிடங்கள்: 3712

    தேர்வு: ஒருங்கிணைந்த மேல்நிலைத் (10+2) தேர்வு, 2024

    பதவி: Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)

    சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

    பதவி: Data Entry Operator (DEO)

    சம்பளம்: மாதம் ரூ.25,500-81,100 மற்றும் நிலை -5(ரூ.29,200 - 92,300.

    பதவி: Data Entry Operator, Grade 'A' நிலை -4

    சம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81,100

    வயதுவரம்பு: 1.8.2024 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும்.

    தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் புதுச்சேரி

    விண்ணப்பிக்கும் முறை: https://ssc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7.5.2024

    Leave A Comment