அக்ஷய்குமாருக்கு காயம் ; நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு
இந்தியில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் அக்ஷய் குமார் தற்போது 'படே மியான் சோட்டே மியான்' என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.
இதில் பிரபல இந்தி நடிகர் டைகர் ஷெராப், மலையாள நடிகர் பிரித்விராஜ், சோனாக்சி சின்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அக்ஷய்குமார், டைகர் ஷெராப் ஆகியோர் மோதும் சண்டை காட்சியொன்று படமாக்கப்பட்டது.
இந்த சண்டை காட்சியில் அக்ஷய்குமாருக்கு அடிபட்டு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மேலும்இ சண்டை காட்சியை படமாக்குவது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
Leave A Comment